- °C
Are You a business owner?
List Your Business / ADதிருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருள்மிகு ஸ்ரீ முள்ளாட்சி மாரியம்மன் ஆலய பங்குனி தீமிதி திருவிழா கடந்த ஞாயிற்றுக்கிழமை கோலாகலமாக நடந்தது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்ட நிலையில், சுமார் 3000க்கும் மேற்பட்ட பக்தர்கள் தீயில் இறங்கி தங்களுடைய நேர்த்திக் கடனை செலுத்தினர். அதனைத் தொடர்ந்து நேற்று 19ஆம் தேதி இரவு 10 மணியளவில் அருள்மிகு முள்ளாச்சி மாரியம்மன் ஆலய தெப்பத் திருவிழா தேவேந்திரகுல வேளாளர்கள் சமூகத்தினர் சார்பில் கொண்டாடப்பட்டது. 80-வது ஆண்டாக நடந்த இந்த தெப்பத் திருவிழாவில் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு அருள்மிகு முள்ளாட்சி மாரியம்மன் ஆலயத்தில் இருந்து முக்கிய கிராமங்கள் வழியாக வலம் வந்து ஆலயத்தின் எதிரே அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் வலம் வந்தார். இந்த தெப்பத்திருவிழா நிகழ்வில் பக்தர்கள், பொதுமக்கள், கிராமவாசிகள், கோவில் நிர்வாகிகள், ஏராளமான உபயதாரர்கள் கலந்து கொண்டு முள்ளாட்சி மாரியம்மனை வழிபட்டனர்.
BackCopyrights © 2024 Quickix.com. All rights reserved. Powered by ♥ Redback
Unless otherwise indicated, all materials on these pages are copyrighted by Quickix advertising Private Limited. All rights reserved. No part of these pages, either text or image may be used for any purpose.